Powered By Blogger

Saturday, March 26, 2011

கோழிக்கறி பகோடா

தேவையான பொருட்கள்:


கோழிக்கறி - கால் கிலோ
இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
மசாலா தூள் - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மிளகு தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
வினிகர் - 1 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 4 கப்



செய்முறை:



கோழிக்கறியை தேவையான அளவிற்கு சதுரத் துண்டுகளாக வெட்டி, மஞ்சள் தூள் சேர்த்துக் கழுவி நீரை வடித்து வைக்கவும்.

அதில் மேற்கூறியவற்றில் எண்ணெயைத் தவிர மற்ற அனைத்து பொருள்களையும் கலந்து அதனை நன்றாக பிசிறி வைக்கவும்.

குறைந்தது 1 மணி நேரம் ஊற வைக்கவும்.

நன்றாக ஊறியுள்ள கோழிக்கறியை எண்ணெயில் நன்கு பொரித்து எடுக்கவும்.

கோழிக்கறி பகோடா தயார்
.

No comments:

Post a Comment