Powered By Blogger

Friday, September 30, 2011

காய்கறி இட்லி


தேவையானப்பொருட்கள்:

பயத்தம் பருப்பு - 1/2 கப்
உளுத்தம் பருப்பு - 1/2 கப்
ரவா - 1 கப்
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 3 அல்லது 4
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
காரட் - 1
பசளிக்கீரை - சிறிது (வேறு வகைக் கீரையையும் சேர்க்கலாம்)
பச்சை பட்டாணி - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

பயத்தம் பருப்பு, உளுத்தம் பருப்பு இரண்டையும் 4 அல்லது 5 மணி நேரம் ஊறவைக்கவும். பருப்பு ஊறியவுடன், தண்ணீரை வடித்து விட்டு, அத்துடன் பச்சைமிளகாய், இஞ்சி, பெருங்காயம் சேர்த்து நன்றாக அரைத்தெடுக்கவும்

காரட்டை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கீரையையும் பொடியாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் அரைத்த பருப்பு விழுது, ரவா, நறுக்கிய காய், கீரை, பட்டாணி ஆகியவற்றை ஒன்றாகப் போட்டு, உப்பையும் சேர்த்துக் கலக்கவும். தேவைபட்டால் சிறிது தயிர் அல்லது தண்ணீரைச் சேர்த்துக் கலக்கவும். இட்லி மாவு பதத்திற்குக் கரைத்துக் கொள்ளவும்.

இட்லி தட்டில் சிறிது நெய்யைத் தடவி, அதில் இட்லி மாவை விட்டு, பத்து நிமிடங்கள் இட்லி பானையில் வைத்து வேக விடவும்.

வண்ணமயமான, சத்துள்ள இட்லி தயார்.

குறிப்பு: இட்லி மாவில் காளான் மற்றும் முந்திரியையும் சேர்க்கலாம். சிறிது சோடா உப்பைச் சேர்த்தால் இட்லி மிருதுவாக இருக்கும்.

No comments:

Post a Comment